Saturday, July 27, 2013

பகுதி 1:அத்தியாயம் 2: பரிவர்த்தனை

சரக்குகள் தாமாகச் சந்தைக்குச் செல்லவும் பரிவர்த்தனைகளைச் செய்து கொள்ளவும் முடியாது என்பது வெளிப்படை. இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று சரக்குகளாக உறவு கொள்ள வேண்டுமானால், அவற்றின் காப்பாளர்கள் அந்த பொருட்களைத் தமது சித்தத்தின் உறைவிடங்களாய்க் கொண்ட ஆட்களாக ஒருவரோடு ஒருவர் உறவு கொள்ள வேண்டும்; ஒருவர் மற்றவரின் சரக்கைத் தனதாக்கிக் கொள்வதும் தன் சொந்தச் சரக்கை கைவிடுவதும் பரஸ்பர சம்மதத்துடன் செய்யப்படுகிற செயலின் வாயிலாக மட்டுமே நடைபெற வேண்டும். தனியுடைமையாளர்களுக்குரிய உரிமகள் இருவருக்கும் இருப்பதை அவர்கள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும். ஆட்கள் சரக்குகளின் பிரதிநிதிகளாகவே, ஆதலால் சரக்குடைமையாளர்களாகவே ஒருவருக்கொருவர் உள்ளனர். 

சரக்குகள் பயன்..மதிப்புகளாக ஈடேற்றம் பெறுமுன் மதிப்புகளாக ஈடேற்றம் பெற வேண்டும். மறு புறம், அவை தம்மைப் பயன்..மதிப்புகளாகக் காட்டிக் கொண்ட பிறகே, மதிப்புகளாக ஈடேற்றம் பெற முடியும்.

ஒரே காரியத் தொகுதி பிரத்தியேகமாகத் தனியாளுக்குரியதாகவும், பிரத்தியேகமாகச் சமுதாய அளவினதாகவும் பொதுவான‌தாகவும் .. ஆக இருவிதமானதாய் ... ஏக காலத்தில் எல்லாச் சரக்குடைமையாளர்களுக்கும் இருக்க முடியாது.

ஒரு சரக்கின் உடைமையாளருக்கு, ஏனைய ஒவ்வொரு சரக்கும், தன் சொந்த சரக்கு தொடர்பாக ஒரு குறிப்பான சமதையாகும். ஆதலால் அவரது சொந்தச் சரக்கு மற்ற அனைவருக்கும் சர்வப் பொதுச் சமதையாகும்.  ஆனால், ஒவ்வொரு சரக்குடைமையாளருக்கும் இது பொருந்தும் என்பதால், உண்மையில் சர்வப் பொதுச் சமதையாக செயல்படுகிற சரக்கு எதுவும் கிடையாது. எந்த சரக்கும் சமுதாயச் செயலின் மூலமாக அன்றி சர்வப் பொது சமதையாக முடியாது.

உழைப்பின் வெவ்வேறு உற்பத்திப் பொருட்கள் நடைமுறையில் ஒன்றோடு ஒன்று சமன் செய்யப்படுவதற்கும், இவ்வாறு சரக்குகளாக நடைமுறையால் மாற்றப்படுவதற்கும் வழி செய்கிற ப‌ரிவர்த்தனைகளின் போது அவசியம் காரணமாய் உருவாகிற படிகமே பணம்.

பரிவர்த்தனைகளின் வரலாற்று முன்னேற்றமும், விரிவாக்கமும் பயன்..மதிப்புக்கும் மதிப்புகுமிடையே சரக்குகளில் மறைந்துள்ள முரணிலையை வளர்க்கின்றன. வாணிபக் காரியங்களுக்காக இம்முரணிலைக்குப் புற தெரிவிப்பை அளிப்பதன் அவசியம் சுயேச்சையான மதிப்பு வடிவம் நிறுவப்படுவதை ஊக்குவிக்கிறது; சரக்குகளாகவும் பணமாகவும் சரக்குகளை வேறுபடுத்துவதன் மூலம் முடிவாகத் திருப்தி காணும் வரை அது ஓய்வதில்லை. அப்படியானால், உற்பத்திப் பொருட்கள் சரக்குகளாக அடைகிற மாற்றம் நிறைவேற்றப்படுகிற அதே வீதத்தில், ஒரு தனிவகைச் சரக்கு பணமாக அடைகிற மாற்றமும் நிறைவேற்றப்படுகிறது.

உற்பத்திப் பொருட்களிம் நேரடிப் பண்டமாற்றில், ஒவ்வொரு சரக்கும் அதன் உடைமையாளருக்கு நேரடியாக ஒரு பரிவர்த்தனைச் சாதனமாகவும் மற்ற அனைவருக்கும் ஒரு சமதையாகவும் உள்ளது; ஆனால் இது, அவர்களுக்கு அது பயன்..மதிப்பைப் பெற்றிருக்கிறது என்ற அளவுக்கே.

பண வடிவத்தை முதலில் வளர்தெடுத்தவை மேய்ச்சல் தொழில் செய்யும் நாடோடி இனங்களே; ஏனெனில் அவர்களது லெளகிக உடைமைகள் அனைத்தும் சங்கமப் பொருட்களாய், என்வே நேரடியாக உடைமை மாற்றம் செய்யத் தக்கவையாய் உள்ளன;

பரிவர்த்தனையானது வட்டார பந்தங்களை உடைத்துக் கிளம்புவதும், சரக்குகளின் மதிப்பு ஸ்தூலமற்ற மனித உழைப்பின் உருவாக மேலும் மேலும் விரிவடைவதும் எவ்விகிதாசாரத்திலோ, அதே விகிதாச்சாரத்தில் ஒரு சர்வப் பொதுச் சமதையின் சமூகப் பணியை ஆற்றிடத் தக்கவையாய் இயற்கை தந்துள்ள சரக்குகளோடு பணம் என்னும் தன்மை ஒட்டிக் கொள்கிறது. உயர் நிலை உலோகங்களே அச்சரக்குகளாகும்.

"தங்கமும் வெள்ளியும் இயற்கையாகவே பணமல்லவென்றாலும், பணம் இயற்கையாகவே தங்கமும் வெள்ளியுமாகும்" என்ற கூற்றின் உண்மை, பணத்தின் பணிகளுக்கு இசைவான இவ்வுலோகங்களின் பெளதிகக் குணங்களால் மெய்பிக்கப்படுகிறது.

பணச் சரக்கின் பயன்..மதிப்பு இரட்டைத் தன்மையதாகிறது. சரக்கு என்ற விகிதத்தில் அதன் தனி வகை பயன்..மதிப்போடு கூடுதலாக அதன் குறிப்பான சமூகப் பணியிலிருந்து தோற்றமெடுக்கிற வடிவ முறையிலான பயன்..மதிப்பு ஒன்றையும் அது பெற்றிருக்கிறது.

எல்லாச் சரக்குகளுமே அவற்றின் சர்வப் பொதுச் சமதையாகிய பணத்தின் குறிப்பான சமதைகள் மட்டுமே என்பதால், அவை சர்வப் பொது சரக்காக இருக்கும் பணம் தொடர்பாகக் குறிப்பான சரக்குகளின் பாத்திரம் வகிக்கின்றன.

பணம் ஒரு சரக்கே என்பது அதைப் பகுப்பாயும் போது அதன் முழு வளர்ச்சியடந்த உருவத்திலிருந்து தொடங்குபவர்களுக்கு மட்டுமே புதிய கண்டுபிடிப்பாயிருக்கும்.

மற்ற ஒவ்வொரு சரக்கையும் போலவே பணமும் தனது மதிப்பின் பருமனை மற்ற சரக்குகளின் வாயிலாக ஒப்பீட்டு முறையில் அன்றி வேறு விதத்தில் வெளியிட முடியாது. இந்த மதிப்பு அதன் உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. அதே அளவு உழைப்பு நேரம் செலவாகிற வேறு எந்த சரக்கின் அளவாலும் அது தெரிவிக்கப்படுகிறது.

பணம் ஒரு சரக்கே என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை. ஒரு சரக்கு பணமாவது எப்படி, ஏன், எவ்வழியில் என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் சிரமம் உள்ளது.

மற்றெல்லா சரக்குகளும் தமது மதிப்பைத் தங்கத்தில் வெளியிடுவதால் அது பணம் ஆகிவிடுகிறது என்பதல்ல; மாறாக, தங்கம் பணமாகும் என்பதால் மற்றெல்லாச் சரக்குகளும் தமது மதிப்புகளைச் சர்வப் பொதுவாகத் தங்கத்தில் வெளியிடுகின்றன என்பதே. இந்நிகழ்முறையின் இடைநிலைப் படிகள் தடயமேதும் விடாமல் முடிவில் மறைந்து போகின்றன. சரக்குகள், தம் தரப்பில் எம்முயற்சியுமின்றியே, தமது மதிப்பு தம் கூட்டத்திலுள்ள இன்னொரு சரக்கின் உருவில் முழுமையாகக் குறிக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றன. தங்கம், வெள்ளி என்ற இந்த பொருட்கள் பூமியின் அடிவயிற்றிலிருந்து வெளிவரும் நிலையிலேயே, மனித உழைப்பு அனைத்தின் நேரடி அவதாரமாக உள்ளன. பணத்தின் மாயா ஜாலத்திற்கு இதுவே காரணம். பணம் போடுகிற புதிர் சரக்குகள் பொடுகின்ற புதிரேயன்றி வேறில்லை.

No comments:

Post a Comment