வேலை நாள் என்றால் என்ன என்ற கேள்விக்கு மூலதனம் என்ன பதில் சொல்கிறது? உழைப்புச் சக்தி மீண்டும் தன் சேவையை வழங்குவதற்கு முற்றிலும் இன்றியமையாததான சில மணி நேர ஓய்வு போக 24 மணி நேர முழுமையும் வேலை நாளில் அடங்கும். எனவே தொழிலாளி என்பவர், தன் வாழ்க்கை பூராவும், உழைப்புச் சக்தியே அன்றி வேறல்லர் என்பதும், எனவே அவரது பயன்படுத்தத்தக்க நேரம் முழுவதுமே, இயற்கையாலும் சட்டத்தாலும், மூலதனத்தின் தற்பெருக்கத்துக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டிய உழைப்பு நேரமே என்பதும் சொல்லாமல் விளங்கும்.
மூலதனம் தார்மிக எல்லைகளை மட்டுமல்லாமல், வெறும் பௌதிக எல்லைகளையும் மீறி உடலின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும், ஆரோக்கியமான பராமரிப்புக்கும் உரிய நேரத்தை அது அபகரித்துக்கொள்கிறது. நல்ல காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைப் பெறுவதற்கு அவசியமான நேரத்தைக் களவாடுகிறது. சாப்பாட்டு நேரம் குறித்து தகராறு செய்கிறது.
உழைப்புச் சக்க்தியினது ஆயுட் காலத்தின் அளவு பற்றி மூலதனத்துக்கு அக்கறையில்லை; அதன் அக்கறைக்குரியதெல்லாம் ஒரு வேலை..நாளில் இயங்க வைக்கத்தக்க உழைப்புச் சக்தியின் அதிக பட்ச அளவு மட்டும்தான்.
முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை (சாராம்சத்தில் உபரி..மதிப்பின் உற்பத்தி, உபரி..உழைப்பை உறிஞ்சுதல்) வேலை..நாளின் நீட்டிப்பைக் கொண்டு, மனித உழைப்புச் சக்தியின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் வேண்டிய இயல்பான தார்மிக..பௌதிக நிலைமைகள் அதற்குக் கிடைக்காதபடி கொள்ளையிட்டு அச்சக்தியை சீரழிக்கச் செய்வதோடு வற்றிப் போகும்படியும் செய்கிறது.
மூலதனம் தற்பெருக்கத்துக்கான தன் வரம்பற்ற வெறியில் தவிர்க்க முடியாமலே அடைய முனைவதான வேலை..நாளின் இயற்கைக்குப் பொருந்தாத நீட்டிப்பு தனிப்பட்ட தொழிலாளியின் ஆயுட் காலத்தை குறுக்கிவிடுகின்றது. எனவே பயன்பட்டு தீர்ந்துபோன சக்திகளை இன்னும் துரித கதியில் மாற்றீடு செய்ய, அவரது உழைப்புச் சக்தியின் மறுவுற்பத்திக்கான செலவுகளின் மொத்தத் தொகை இன்னும் அதிகமாகி விடும்.
மனிதன் என்னும் சங்கமப் பொருளிலிருந்து, அது வெளிப்படுத்தவல்ல அதிகபட்ச முயற்சியை மிகக் குறுகிய காலத்தில் கறப்பதே மிகவும் பயனுள்ள சிக்கனமாகும் என்பது அடிமைகளை இறக்குமதி செய்யும் நாடுகளில் அடிமை..மேலாண்மையின் செயல்விதிகளில் ஒன்று
பல சந்தர்ப்பங்களில் வருடாந்திர இலாபங்கள் தோட்டங்களின் முழு மூலதனத்துக்கே சமமாய் இருக்கிற வெப்பப் பிரதேசச் சாகுபடியில்தான் நீக்ரோ உயிர் மிக அலட்சியமாகப் பலியிடப்படுகிறது.
நம்ப முடியாத செல்வச் செழிப்புக்கு பல நூறு ஆண்டுகளாகப் பெயர் பெற்றிருக்கும் மெற்கிந்தியத் தீவுகளின் வேளாண்மைதான் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த பல லட்சம் மக்களை விழுங்கியுள்ளது.
வருவாய்கள் கோடிக் கணக்கில் கணக்கிடப்படுகிற, தோட்ட அதிபர்கள் இளவரசர்களாய் இருக்கிற இந்நாளைய கியூபாவில்தான், அடிமை வர்க்கத்திடம் படுமட்டமான உணவையும், சோர்ந்து ஒடுங்கச் செய்யும் ஓயாத உழைப்பையும், ஏன், ஆண்டு தோறும் அவ்வர்க்கத்தில் ஒரு பகுதி முற்றாக அழிவதையும் கூடக் காண்கிறோம்.
லண்டனில் ரொட்டித் தொழிலாளர்களின் அணிகளை மிகையுழைப்பு எப்படிக் குறுக்கியது என்பதைக் கேட்டறிந்தோம். ஆயினும் ரொட்டித் தொழிலகங்களில் சாவதற்காக லண்டன் உழைப்புச் சந்தையில் எப்போதுமே தேவைக்கதிகமானோர் உள்ளனர்.
மண்பாண்டத் தொழில் ஆயுள் குறுகியோரின் தொழில்களில் ஒன்று என்பதைப் பார்த்தோம். ஆனால் மண்பாண்டத் தொழிலாளர்கள் பற்றாக்குறையாகவா இருக்கிறார்கள்?
பஞ்சுத் தொழில் 90 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இக்காலத்தில் அது ஆலை தொழிலாளர்களின் ஒன்பது தலைமுறைகளை அழித்துள்ளதென்று துணிந்து சொல்லலாம் என் நம்புகிறேன்.
1834இல் வேளாண்மை வட்டங்களின் "உபரி..மக்கள் தொகையை" வட பகுதிக்கு அனுப்பவேண்டுமாய் தொழிலதிபர்கள் வறியோர் நல சட்ட ஆணையர்களிடம் யோசனை கூறினார்கள்.
1860இல் பஞ்சுத் தொழில் உச்ச நிலையிலிருந்தது... தொழிலதிபர்கள் மீண்டும் ஆட்கள் பற்றாகுறையாக இருக்கக் கண்டனர். .. அவர்கள் "சதை முகவர்கள்" என்று அழைக்கப் படுவோரிடம் மனு செய்தனர்.
பொதுவாக முதலாளிக்கு அனுபவம் காட்டுவது என்னவெனில் மக்கள் தொகை இடையறாது மிகைப்பட்டுவிடுகிறது என்பதே.
உண்மையில் வரலாற்று வழியில் சொன்னால் நேற்று முளைத்த ஒன்றாகிய முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை மக்களது ஜீவ சக்தியின் அடி வேரையே எவ்வளவு விரைவாகவும் உறுதியாகவும் பற்றியுள்ளது என்பதை மதிநுட்பமுள்ள நோக்கருக்கு அனுபவம் காட்டுகிறது.
சமுதாயத்திடமிருந்து நிர்பந்தம் இருந்தாலன்றி, தொழிலாளியின் ஆரோக்கியம் பற்றியோ ஆயுள் பற்றியோ மூலதனத்துக்குக் கவலையில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இதெல்லாம் உண்மையில் தனிப்பட்ட முதலாளியின் நல்லெண்ணத்தையோ கெட்டெண்ணத்தையோ பொறுத்ததன்று. தடையில்லாப் போட்டியானது முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் உள்ளார்ந்த விதிகளை, வெளியிலிருந்து வலுவந்தம் செய்து ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளியின் மீதும் அதிகாரம் செலுத்தும் விதிகளாய் உருவெடுக்கச் செய்கிறது.
முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையே நூற்றாண்டுக்கால போராட்டத்தின் விளைவாகவே இயல்பான வேலை..நாள் நிலை நாட்டப்பட்டது. இந்தப் போராட்டத்தின் வரலாற்றில் எதிரெதிரான இரு போக்குகளைக் காண்கிறோம்.
நவீன காலத் தொழிற்சாலைச் சட்டங்கள் வேலை..நாளைக் கட்டாயமாகக் குறைத்தனவென்றால், முந்தைய சட்டங்கள் அதைக் கட்டாயமாக அதிகப்படுத்த முயன்றன.
மூலதனம் போதிய அளவில் உபரி..உழைப்பை உறிஞ்சும் உரிமையை, பொருளாதார உறவுகளின் வலிமைகொண்டு மட்டுமின்றி, அரசின் உதவி கொண்டும் நிலை நாட்டுகிறது.
முதலாவது தொழிலாளர் சட்டம் 1349 அதற்கான சமாதானத்தை மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய பிளேக் நோயின் உருவில் கண்டது.
நமக்கு அக்கறைக்குரிய ஒரே அமிசமான வேலை..நாளின் வரம்புகள் என்ற அமிசம் 1496ஆம் ஆண்டு சட்டத்தில் திரும்ப வருகிறது.
1562 ஆம் ஆண்டில் எலிசபெத்தின் சட்டம் ஒன்று "தின அல்லது வாரக் கூலிக்கு அமர்த்தப்படும்" உழைப்பாளர்கள் அனைவருக்குமான வேலை..நாளின் அளவைத் தொடாமல் விடுகிறது.
1833இல் 13 முதல் 18 வரை வயதுடைய குழந்தைகளுக்கான வேலை..நாளை நான்கு தொழிற் கிளைகளில் 12 முழு மணிகளாக ஆங்கிலேயப் பாராளுமன்றம் குறைத்தபோது, ஆங்கிலேய தொழில் துறையின் இறுதித் தீர்ப்பு நாள் வந்து விட்டதாகத் தோன்றியது.
1802க்கும் 1833க்குமிடையே 5 தொழிலாளர் சட்டங்களை பாராளுமன்றம் நிறைவேற்றியது; ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு சல்லி காசு கூட ஒதுக்காமல் சாமர்த்தியம் புரிந்தது.
ஒழுங்குபடுத்துகிற இந்த நுட்ப விதிகள் எவ்விதத்தும் பாராளுமன்றக் கற்பனையால் விளைந்தவையல்ல. அவை நவீன பொருளுற்பத்தி முறையின் இயற்கை விதிகளாய் நிலைமைகளிலிருந்து சிறிது சிறிதாக உருவாயின. அவற்றை அரசு வகுத்ததும், அதிகாரபூர்வமாக அங்கிகரித்ததும், பிரகடனம் செய்ததும் நீண்ட நெடிய வர்க்கப் போராட்டத்தின் விளைவாகும்.
1844 முதல் 1847 வரையிலான காலத்தில், தொழிற்சாலை சட்டத்தின் படி பொதுவாகவும், சீராகவும் எல்லாத் தொழிற் கிளைகளிலும் 12 மணி நேர வேலை நாள் அமலாயிற்று.
தொழிலதிபர்கள் இந்த "முன்னேற்றத்தை" அதற்கீடான "பின்னடைவு" இல்லாமல் அனுமதிக்கவில்லை. அவர்களின் தூண்டுதலின் பேரில், காமன்ஸ் சபை சுரண்டலுக்குரிய குழந்தைகளுக்கான குறைந்த பட்ச வயதை ஒன்பதிலிருந்து எட்டாகக் குறைத்தது.
1847 புதிய தொழிற்சாலைச் சட்டம் "இளம் வயதினருக்கும் (13 முதல் 18 வயது வரை), எல்லாப் பெண்களுக்கும் வேலை..நாளை 1847 ஜூலை முதைல் 11 மணி நேரமாகவும் 1848 மே 1 முதல் 10 மணி நேரமாகவும் குறைக்க வேண்டும் என்று ஆணையிட்டது.
இச்சட்டம் அமலுக்கு வராமல் தடங்கல் செய்யும் பொருட்டு மூலதனம் இப்போது ஒரு பூர்வாங்க இயக்கத்தை ஆரம்பித்தது.புளுகு, லஞ்சம், மிரட்டல் போன்ற எல்லா உபாயங்களையும் கையாண்டு "இச்சட்டம் தம்மை ஒடுக்குவதாக" தொழிலாளர்களைப் புகார் செய்ய வைத்தனர். ஆனால் தொழிலதிபர்கள் தாம் விரும்பியதைப் போல் தொழிலாளர்களை பேச வைப்பதில் வெற்றி பெறவில்லை.
1850 ஆம் வருடத்திய சட்டம் அதன் ஆளுகைக்குரிய தொழிற் கிளைகளில் எல்லா தொழிலாளர்களின் வேலை. .நாளையும் முறைப்படுத்தியது. இதனை ஏற்பதில் மூலதனம் காட்டிய அதிருப்தி சட்டத்தின் ஒவ்வொரு வரியிலும் காணக் கிடக்கிறது. ஆயினும், நவீனப் பொருளுற்பத்தி முறைக்கே மிகவும் உரித்தான படைப்பாக அமைந்த பெருந்தொழிற் கிளைகளில் சட்டப்படி வேலை..நாளுக்கு வரம்பிடுவதில் வெற்றி கிட்டியது. அரை நூற்றாண்டு கால உள் நாட்டு போருக்குப் பிறகே தொழிலதிபர்களை சட்டபூர்வ வரம்பிடலுக்கும், ஒழுங்கு முறைக்கும் பையப் பையப் பணிய வைக்க முடிந்தது. இப்போர் தொழில் துறையின் பிறப்பிடமாகிய இங்கிலாந்தில் முதலில் வெடித்தெழுகிறது.
பொருளுற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் முதலில் சகல விதத்திலும் வரம்பு கடந்த மட்டு மீறலுக்கு வழி வகுத்தன. பின், இதற்கு எதிரிடையாக, சமுதாயத்திடமிருந்து ஒரு கட்டுப்பாட்டை அவசியமாக்கின. சமுதாயம் வேலை..நாளுக்கும் அதன் இடைநிறுத்தங்களுக்கும் சட்ட வரம்பிட்டு, அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரே சீரானவை ஆக்குகிறது.
பிரான்ஸில் 12 மணி நேரச் சட்டத்தை பெற்றெடுக்க பிப்ரவரி புரட்சி அவசியமாகிறது.
வட அமெரிக்காவில் உள் நாட்டுப் போரில் விளைந்த முதற் பலன் எட்டு மணி நேரக் கிளர்ச்சி. "எட்டு மணி நேரமே இயல்பான வேலை..நாள் ஆகுமென சட்டம் இயற்றுதல் வேண்டும். சீரும் சிறப்பும் வாய்ந்த இந்த விளைவு கிட்டும் வரை நமது முழு பலத்தையும் கொண்டு முயன்றிட உறுதி பூண்டுள்ளோம்" என்று 1866இல் பால்டிமரில் நடந்த தொழிலாளர் பொதுப் பேராயம் அறிவித்தது.
அதே நேரத்தில் ஜெனிவாவில் நடந்த சர்வதேச உழைக்கும் மக்கள் சங்கத்தின் பேராயம், லண்டன் பொது மன்றத்தின் பிரேரணையின் பேரில், "எட்டு மணி நேரமே வேலை..நாளுக்குரிய சட்ட வரம்பு என்று பேராயம் முன் மொழிகிறது" என்று தீர்மானம் இயற்றியது.
1834இல் வேளாண்மை வட்டங்களின் "உபரி..மக்கள் தொகையை" வட பகுதிக்கு அனுப்பவேண்டுமாய் தொழிலதிபர்கள் வறியோர் நல சட்ட ஆணையர்களிடம் யோசனை கூறினார்கள்.
1860இல் பஞ்சுத் தொழில் உச்ச நிலையிலிருந்தது... தொழிலதிபர்கள் மீண்டும் ஆட்கள் பற்றாகுறையாக இருக்கக் கண்டனர். .. அவர்கள் "சதை முகவர்கள்" என்று அழைக்கப் படுவோரிடம் மனு செய்தனர்.
பொதுவாக முதலாளிக்கு அனுபவம் காட்டுவது என்னவெனில் மக்கள் தொகை இடையறாது மிகைப்பட்டுவிடுகிறது என்பதே.
உண்மையில் வரலாற்று வழியில் சொன்னால் நேற்று முளைத்த ஒன்றாகிய முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை மக்களது ஜீவ சக்தியின் அடி வேரையே எவ்வளவு விரைவாகவும் உறுதியாகவும் பற்றியுள்ளது என்பதை மதிநுட்பமுள்ள நோக்கருக்கு அனுபவம் காட்டுகிறது.
சமுதாயத்திடமிருந்து நிர்பந்தம் இருந்தாலன்றி, தொழிலாளியின் ஆரோக்கியம் பற்றியோ ஆயுள் பற்றியோ மூலதனத்துக்குக் கவலையில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இதெல்லாம் உண்மையில் தனிப்பட்ட முதலாளியின் நல்லெண்ணத்தையோ கெட்டெண்ணத்தையோ பொறுத்ததன்று. தடையில்லாப் போட்டியானது முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் உள்ளார்ந்த விதிகளை, வெளியிலிருந்து வலுவந்தம் செய்து ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளியின் மீதும் அதிகாரம் செலுத்தும் விதிகளாய் உருவெடுக்கச் செய்கிறது.
முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையே நூற்றாண்டுக்கால போராட்டத்தின் விளைவாகவே இயல்பான வேலை..நாள் நிலை நாட்டப்பட்டது. இந்தப் போராட்டத்தின் வரலாற்றில் எதிரெதிரான இரு போக்குகளைக் காண்கிறோம்.
நவீன காலத் தொழிற்சாலைச் சட்டங்கள் வேலை..நாளைக் கட்டாயமாகக் குறைத்தனவென்றால், முந்தைய சட்டங்கள் அதைக் கட்டாயமாக அதிகப்படுத்த முயன்றன.
மூலதனம் போதிய அளவில் உபரி..உழைப்பை உறிஞ்சும் உரிமையை, பொருளாதார உறவுகளின் வலிமைகொண்டு மட்டுமின்றி, அரசின் உதவி கொண்டும் நிலை நாட்டுகிறது.
முதலாவது தொழிலாளர் சட்டம் 1349 அதற்கான சமாதானத்தை மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய பிளேக் நோயின் உருவில் கண்டது.
நமக்கு அக்கறைக்குரிய ஒரே அமிசமான வேலை..நாளின் வரம்புகள் என்ற அமிசம் 1496ஆம் ஆண்டு சட்டத்தில் திரும்ப வருகிறது.
1562 ஆம் ஆண்டில் எலிசபெத்தின் சட்டம் ஒன்று "தின அல்லது வாரக் கூலிக்கு அமர்த்தப்படும்" உழைப்பாளர்கள் அனைவருக்குமான வேலை..நாளின் அளவைத் தொடாமல் விடுகிறது.
1833இல் 13 முதல் 18 வரை வயதுடைய குழந்தைகளுக்கான வேலை..நாளை நான்கு தொழிற் கிளைகளில் 12 முழு மணிகளாக ஆங்கிலேயப் பாராளுமன்றம் குறைத்தபோது, ஆங்கிலேய தொழில் துறையின் இறுதித் தீர்ப்பு நாள் வந்து விட்டதாகத் தோன்றியது.
1802க்கும் 1833க்குமிடையே 5 தொழிலாளர் சட்டங்களை பாராளுமன்றம் நிறைவேற்றியது; ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு சல்லி காசு கூட ஒதுக்காமல் சாமர்த்தியம் புரிந்தது.
ஒழுங்குபடுத்துகிற இந்த நுட்ப விதிகள் எவ்விதத்தும் பாராளுமன்றக் கற்பனையால் விளைந்தவையல்ல. அவை நவீன பொருளுற்பத்தி முறையின் இயற்கை விதிகளாய் நிலைமைகளிலிருந்து சிறிது சிறிதாக உருவாயின. அவற்றை அரசு வகுத்ததும், அதிகாரபூர்வமாக அங்கிகரித்ததும், பிரகடனம் செய்ததும் நீண்ட நெடிய வர்க்கப் போராட்டத்தின் விளைவாகும்.
1844 முதல் 1847 வரையிலான காலத்தில், தொழிற்சாலை சட்டத்தின் படி பொதுவாகவும், சீராகவும் எல்லாத் தொழிற் கிளைகளிலும் 12 மணி நேர வேலை நாள் அமலாயிற்று.
தொழிலதிபர்கள் இந்த "முன்னேற்றத்தை" அதற்கீடான "பின்னடைவு" இல்லாமல் அனுமதிக்கவில்லை. அவர்களின் தூண்டுதலின் பேரில், காமன்ஸ் சபை சுரண்டலுக்குரிய குழந்தைகளுக்கான குறைந்த பட்ச வயதை ஒன்பதிலிருந்து எட்டாகக் குறைத்தது.
1847 புதிய தொழிற்சாலைச் சட்டம் "இளம் வயதினருக்கும் (13 முதல் 18 வயது வரை), எல்லாப் பெண்களுக்கும் வேலை..நாளை 1847 ஜூலை முதைல் 11 மணி நேரமாகவும் 1848 மே 1 முதல் 10 மணி நேரமாகவும் குறைக்க வேண்டும் என்று ஆணையிட்டது.
இச்சட்டம் அமலுக்கு வராமல் தடங்கல் செய்யும் பொருட்டு மூலதனம் இப்போது ஒரு பூர்வாங்க இயக்கத்தை ஆரம்பித்தது.புளுகு, லஞ்சம், மிரட்டல் போன்ற எல்லா உபாயங்களையும் கையாண்டு "இச்சட்டம் தம்மை ஒடுக்குவதாக" தொழிலாளர்களைப் புகார் செய்ய வைத்தனர். ஆனால் தொழிலதிபர்கள் தாம் விரும்பியதைப் போல் தொழிலாளர்களை பேச வைப்பதில் வெற்றி பெறவில்லை.
1850 ஆம் வருடத்திய சட்டம் அதன் ஆளுகைக்குரிய தொழிற் கிளைகளில் எல்லா தொழிலாளர்களின் வேலை. .நாளையும் முறைப்படுத்தியது. இதனை ஏற்பதில் மூலதனம் காட்டிய அதிருப்தி சட்டத்தின் ஒவ்வொரு வரியிலும் காணக் கிடக்கிறது. ஆயினும், நவீனப் பொருளுற்பத்தி முறைக்கே மிகவும் உரித்தான படைப்பாக அமைந்த பெருந்தொழிற் கிளைகளில் சட்டப்படி வேலை..நாளுக்கு வரம்பிடுவதில் வெற்றி கிட்டியது. அரை நூற்றாண்டு கால உள் நாட்டு போருக்குப் பிறகே தொழிலதிபர்களை சட்டபூர்வ வரம்பிடலுக்கும், ஒழுங்கு முறைக்கும் பையப் பையப் பணிய வைக்க முடிந்தது. இப்போர் தொழில் துறையின் பிறப்பிடமாகிய இங்கிலாந்தில் முதலில் வெடித்தெழுகிறது.
பொருளுற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் முதலில் சகல விதத்திலும் வரம்பு கடந்த மட்டு மீறலுக்கு வழி வகுத்தன. பின், இதற்கு எதிரிடையாக, சமுதாயத்திடமிருந்து ஒரு கட்டுப்பாட்டை அவசியமாக்கின. சமுதாயம் வேலை..நாளுக்கும் அதன் இடைநிறுத்தங்களுக்கும் சட்ட வரம்பிட்டு, அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரே சீரானவை ஆக்குகிறது.
பிரான்ஸில் 12 மணி நேரச் சட்டத்தை பெற்றெடுக்க பிப்ரவரி புரட்சி அவசியமாகிறது.
வட அமெரிக்காவில் உள் நாட்டுப் போரில் விளைந்த முதற் பலன் எட்டு மணி நேரக் கிளர்ச்சி. "எட்டு மணி நேரமே இயல்பான வேலை..நாள் ஆகுமென சட்டம் இயற்றுதல் வேண்டும். சீரும் சிறப்பும் வாய்ந்த இந்த விளைவு கிட்டும் வரை நமது முழு பலத்தையும் கொண்டு முயன்றிட உறுதி பூண்டுள்ளோம்" என்று 1866இல் பால்டிமரில் நடந்த தொழிலாளர் பொதுப் பேராயம் அறிவித்தது.
அதே நேரத்தில் ஜெனிவாவில் நடந்த சர்வதேச உழைக்கும் மக்கள் சங்கத்தின் பேராயம், லண்டன் பொது மன்றத்தின் பிரேரணையின் பேரில், "எட்டு மணி நேரமே வேலை..நாளுக்குரிய சட்ட வரம்பு என்று பேராயம் முன் மொழிகிறது" என்று தீர்மானம் இயற்றியது.