Tuesday, November 19, 2013

பாகம் 6. அத்தியாயம் 22: நாடுகளிடையிலான கூலி வேறுபாடுகள்.

நாட்டினுள் கூலியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் வெவ்வேறு சேர்க்கைகளது தொடராக எது தோற்றமளிக்கிறதோ, அது வெவ்வேறு நாடுகளிலும் ஒரே காலத்தில் தேசக் கூலி மட்டத்திலான வேறுபாடாக தோற்றமளிக்கக் கூடும். ஆகவே, வெவ்வேறு நாடுகளில் கிடைக்கும் கூலிகளை ஒப்பிடுகையில், உழைப்புச் சக்தியினது மதிப்பின் அளவிலான மாற்றங்களை நிர்ணயிக்கிற எல்லாக் காரணிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். 

அந்தந்தத் தொழிலிலும் வெவ்வேறு நாடுகளிலும் கிடைக்கிற சராசரி தினக் கூலியை முதலில் ஒரேசீரான வேலை-நாளுக்கு உரியதாகப் பெயர்த்திட வேண்டும். பலன்வீதக் கூலி மட்டுமே உழைப்பின் உற்பத்தித் திறன், மும்முரம் இரண்டுக்கும் அளவு கோலாக இருக்க முடியுமென்பதால் நேரவீதக் கூலியையும் பலன்வீதக் கூலியாகப் பெயர்த்திட வேண்டும். 

உழைப்பின் சராசரி மும்முரம் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. உலக உழைப்பின் சராசரி அலகு இந்த அளவுகோலின் அலகாகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி ஒரு நாட்டில் வளர்ச்சியடைந்திருக்கும் அதே விகிதத்தில், அங்கு உழைப்பின் தேச மும்முரமும் உற்பத்தித் திறனும் சர்வதேச மட்டத்துக்கு மேலாக உயர்கின்றன. ஆகவே ஒரே வேலை நேரத்தில் வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஒரே வகைச் சரக்குகளின் வெவ்வேறு அளவுகளது சர்வதேச மதிப்புகள் சமமற்றவை; இம்மதிப்புகள் வெவ்வேறு விலைகளில், அதாவது சர்வதேச மதிப்புகளுக்கேற்ப மாறுபடும் பணத் தொகைகளில் தெரிவிக்கப்படுகின்றன. ஆதலால், பணத்தின் ஒப்பீட்டு மதிப்பானது அதிகம் வளர்ச்சியடைந்த முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையுடன் கூடிய நாட்டில் குறைவாக வளர்ச்சியடைந்த நாட்டிலிருப்பதை விடக் குறைவாய் இருக்கும். அப்படியானால், பணமாகத் தெரிவிக்கப்படும் உழைப்புச் சக்தியின் சமதையான பெயர்க் கூலியும் இரண்டாவது நாட்டிலிருப்பதை விட முதலாவது நாட்டில் அதிகமாய் இருக்கும்; இதிலிருந்து உண்மைக் கூலியும், அதாவது தொழிலாளிக்குக் கிடைக்கக்கூடிய வாழ்வுச் சாதனங்களும் இவ்வாறே அதிகமாய் இருக்கும் எனக் கொள்ளலாகாது.

தினக் கூலி அல்லது வாரக் கூலி போன்ற நேரவீதக் கூலி இரண்டாவது நாடிலிருப்பதை விட முதலாவது நாட்டில் அதிகமாய் இருப்பினும் உழைப்பின் ஒப்பீட்டு விலை --- அதாவது உபரி..மதிப்பும் உற்பத்திப் பொருளின் மதிப்பு ஆகிய இரண்டுடனும் ஒப்பிடுகையிலான உழைப்பின் விலை --- முதலாவதிலிருப்பதை விட இரண்டாவதில் அதிகமாய் இருக்கக் காணலாம். 

No comments:

Post a Comment