பணத் தொகை உற்பத்திச் சாதனங்களாகவும் உழைப்புச் சக்தியாகவும் மாற்றம் பெறுவதுதான் மூலதனமாகச் செயல்படப் போகிற மதிப்புத் தொகை எடுத்து வைக்கும் முதலடி.
முதலாளி தமது சரக்குகளை விற்கவும், விற்றுக் கிடைக்கிற பணத்தில் பெரும் பகுதியை மீண்டும் மூலதனமாக மாற்றவும் முடிந்திடல் வேண்டும் ... இதுவே மூலதனத் திரட்டுலுக்கான முதல் நிபந்தனை.
ஒரு புறம் முதலாளி அவர் உற்பத்தி செய்த சரக்குகளை அவற்றின் மதிப்புக்கே விற்பதாகக் கொள்கிறோம். மறு புறம், முதலாளித்துவ் உற்பத்தியாளரை உபரி-மதிப்பு முழுவதன் உடைமையாளாராக அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால், அவருடன் சேர்ந்து கொள்ளைப் பொருளை பகிர்ந்து கொள்வோர் அனைவருக்கும் பிரதிநிதியாகக் கொள்கிறோம்.
உபரி-மதிப்பு துண்டுகளாகப் பிளவுறுவதால் அதன் இயல்பு மாறிவிடுவதில்லை; எந்நிலைமைகளில் அது திரட்டலின் கூறுகளில் ஒன்றாகிறதோ அந்நிலைமைகளும் மாறி விடுவதில்லை.
மூலதனத் திரட்டல் நிகழ்முறையின் சாமானிய அடிப்படை வடிவம், அதனை தோற்றுவிக்கிற சுற்றோட்ட நிகழ்ச்சியாலும், உபரி..மதிப்பு பிளவுறுவதாலும் மறைக்கப்படுகிறது. ஆகவே, இந்நிகழ்முறையை சரிவரப் பகுத்தாய வேண்டுமானால், அதன் உள்ளியக்கச் செயற்பாட்டை மறைக்கிற புறத் தோற்றங்கள் யாவற்றையும் சிறிது நேரத்துக்கு கவனியாது விட்டுவிட வேண்டும்.
No comments:
Post a Comment